Sunday 29 April 2012

Reply for Mayyam writer ANM

anm எழுதியதற்கு எம்.ஜி.ஆர் பக்தர்கள் தரும் பதில்.












இறுதியாக ஒன்றை கூற விரும்புகிறோம். உங்கள் சிவாஜி கணேசன் அவர்கள், எங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இப்பூவுலகினை விட்டு தெய்வமானபோது ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களை போல் வாழ வேண்டும் என்று கூறி அஞ்சலி செலுத்தினார்.

எதிரிகளை அடிக்கும் சூழ்ச்சிக்காரர் மற்றும் முதுகில் குத்துபவர் என்பது உண்மையாருப்பின் சிவாஜி கணேசன் அவர்கள் எங்கள் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் போது ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களை போல் வாழ வேண்டும் என்று கூறி அஞ்சலி செலுத்தி இருக்க மாட்டார் என்பதை நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும். அப்படி அவர் பொய்யாக சொல்ல வேண்டிய அவசியம் உங்கள் சிவாஜி கணேசனுக்கு இல்லை அந்த வார்த்தைகள் உண்மையாய் அவர் நெஞ்சில் இருந்த வந்தவை.

நீங்கள் சிவாஜி கணேசன் அவர்களை புகழ்ந்து கொள்ளுங்கள் ஆனால் எங்கள் புனிதத்தலைவரை விமர்சித்தால் விளக்க கணைகள் தொடரும். சிவாஜி கணேசன் அவர்களின் இளைய மகன் திரு.பிரபு அவர்கள் மீது கொண்ட மிகுந்த மரியாதை காரணமாக இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

Sunday 15 April 2012

MGR In Kumudham

குமுதம் பத்திரிக்கையில் ஸ்டாலின் அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி தனக்கு ஏற்பட்ட சிலவற்றை விவரித்திருக்கிறார்.

கீழே உள்ள படங்களை சொடுக்கவும்.




Posted by Tirupur Ravichandran.

Friday 6 April 2012

MGR And V.N.Chidambaram


திரு வி என் சிதம்பரம் அவர்கள் (முன்னாள் தக்கார் மீனாட்சியம்மன் திருக்கோவில் மதுரை) மக்கள் திலகத்தின் பேரன்பை பெற்றவர். பொன்மனச்செம்மல் அவர்கள்  திரு வி என் சிதம்பரம் அவர்களை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலின் தக்காராக நியமனம் செயதார். அப்பொறுப்பை ஒன்பது ஆண்டுகள் திறம்பட செய்து அனைவரின் பாராட்டை பெற்றார்.  அப்பெருமகனின் மனிதநேயம் மற்றும் குண நலன்களை பற்றி பல நூல்களில் நிறைய எழுதி உள்ளார்.


திரைப்படதுறையினர், அரசியல் பிரமுகர்கள், ஆன்மீக பெரியோர்கள் மற்றும்  அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறார். 

தமது தாத்தா வள்ளியப்ப செட்டியார் பட்ட கஷ்டங்களை மனதில் கொண்டு பிறர் துன்பம் நீங்க எராளமான உதவிகளை செய்து வருகிறார். ஏப்ரல் ஒன்றாம் தேதி தமது பிறந்த ஊரான ராங்கியத்தில் தமது தாத்தாவின் சிலையை திறந்து பல நல திட்ட உதவிகளை செயதார். முதல் தவணையாக ஐம்பது லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பு தொகையாக போட்டுள்ளார்.  இரண்டாம் தவணையாக இன்னும் ஐம்பது லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பு தொகையாக போட உள்ளார். வைப்பு தொகையில் வரும் வட்டியில் பல நல திட்ட உதவிகள் தொடர்ந்து செய்ய உள்ளார். மக்கள் திலகத்தின் வழியில் செட்டிநாட்டு வள்ளல்திரு வி என் சிதம்பரம் அவர்கள் ஏழை எளியவர் வாழ்வு வளம் பெற செய்து வரும் மனிதநேய உதவிகளை மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பாக  வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Tuesday 3 April 2012

Flase Propoganda

கர்ணனின்  பொய்யான  விளம்பரமும்  தவறான தகவல்களும்

சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படம் 1964  பொங்கல்  அன்று மிகவும் எதிர்பார்ப்புடன் வெளி வந்து  சாதாரண  வசூல் பெற்று தயாரிப்பாளரையும்  விநியோகஸ்தர்களையும் ஏமாற்றிய  படம்  கர்ணன் . சென்னை - சாந்தி  மற்றும்  தங்கம் - மதுரை  2  திரை யில் 100  நாள்  ஒட்டிய  பரிதாபம் எல்லோரும்  அறிந்ததே . நீண்ட இடை வெளிக்கு பின்னர் ஒரு கோடி  செலவு செய்து ஊடகங்கள் ,தினசரி  விளம்பரங்கள் ,வானொலி  மற்றும் எல்லா விதமான செலவுகள்  செய்து 3  வாரத்தில்  ஒரு கோடி  வசூல் செய்து சாதனை  என்று  விளம்பரம்  செய்து  வருவது  மிகவும் கேலி கூத்தாக  உள்ளது.
அன்றும் இன்றும் என்றும்  உண்மையான  வசூல் சக்ரவர்த்தி  மக்கள்திலகம்  ஒருவரே.

கடந்த கால உண்மை நிலவரங்கள்
மக்கள் திலகம் மறைந்து  25  ஆண்டுகள்  பின்னரும் தொடர்ந்து அவரது  எண்பது படங்கள் தென்னாடெங்கும்  திரையிடப்பட்டு  அமோக  வசூல் பெற்று
 முதலிடத்தில் உள்ளார்.

2011 ஜூன்  மாதம்  பெங்களூரில்  அடிமைபெண் 18   அரங்குகளில்  வெளியாகி  சுமார் இருபது லக்ஷம்  வசூல் செய்து  மாபெரும்  வரலாறு  படைத்தது . அதற்கு  போட்டியாக  இந்த ஆண்டு  கணேசனின்  வசந்தமாளிகை  ஒரே திரையில் வெளியாகி அவமான தோல்வி பெற்றது . வசந்த மாளிகை நொந்த  மாளிகை ஆனது. சிவாஜி  வாழ்ந்த  காலத்திலும் , நடிப்பை விட்டு  வாழ்ந்த காலத்திலும் .மறைந்து 11 ஆண்டு இந்த காலத்திலும் மக்கள் திலகம் செய்த சாதனைகளை  நெருங்க முடியவில்லை .

எந்த காலத்திலும் மக்கள்திலகம்  படைத்த  சாதனைகளை  சிவாஜி  ரசிகர்களால் கனவிலும் நெருங்க முடியாது  என்பதே  உண்மை .