Tuesday 16 October 2012

மங்காத ஒளிவிளக்கு

K. Babu, Nanmangalam, Chennai

சமீபத்தில் மறு வெளியீடு செய்யப்பட்ட மக்கள் திலகத்தின் "ஒளி  விளக்கு"  பற்றிய ஓர் பெருமை மிகு குறிப்பு  :

1.  எந்த வித  ஆரவாரமும் ஆர்ப்பட்டமும் இல்லாமல் சந்ததியின்றி (சைலன்ட்) வெளியிடப்பட்ட திரைப்படம்.
2.  டிரையிலர் என்ற பெயரில் விழா எதுவும் எடுக்கப்பட வில்லை.
3.  டிஜிட்டல் முறையில்  வெளியிடப்பட வில்லை.
4.  பழங்கால புராணக்   கதையை தழுவி எடுக்கப்பட வில்லை..
5.  நட்சத்திர  பட்டாளங்களை கொண்டு தயாரிக்கப் பட வில்லை.
6.  120க்கும் குறைவான இருக்கைகள் கொண்ட சிறிய  திரை அரங்கில் ஒரு காட்சி மட்டும் ஓட்டப்பட்டது கிடையாது.
7.  1060 இரூக்கைகள் கொண்ட சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் 3வது வாரமாக வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறது.
8.  குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டித் தரும் படமாக விளங்குகிறது.
9.  எல்லாவற்றிக்கும் மேலாக மிக மிக சுமாரான பிரிண்ட்ட்டில் இத்   திரைப்படம். ஓடிக்  கொண்டிருக்கிறது.

81  வருட  தமிழ் திரைப்பட வரலாற்றில்  இது  ஒரு மகத்தான சாதனை. 

பொன் மனச் செம்மலின் பட சாதனைகளை அவரது இன்னொரு படத்தினால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதற்கு இது மற்றும் ஓர்  எடுத்துக்காட்டு.  
 

Thursday 11 October 2012

சாதனை செய்த ஒளிவிளக்கு

சமீபத்தில் சென்னை அண்ணா மற்றும் மகாலட்சுமி அரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட மக்கள் திலகத்தின்  ஒளி விளக்கு திரைப்படத்தின் விழா கொண்டாட்டங்கள் மாவட்டத்தின் பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புக்கள் சார்பில் பிரமிக்கத்தக்க வகையில் நடைபெற்றன.    

பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கண் கொள்ளா காட்சியை பொது மக்கள் கண்டு களித்தனர்.  சென்னை அண்ணா அரங்கில் பொன் மனச் செம்மல் அவர்களின் பிரம்மாண்டமான கட் அவுட் களுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர்  உட்பட பல்வேறு  நற் திரவ அபிஷேகங்கள் செய்யப்பட்டன. 

சென்னை மகாலட்சுமி அரங்கின் வெளியே, ரசிகர்களின் கூட்டங்களால்  சாலை போக்கு வரத்து ஸ்தம்பித்தது.

முதல் வாரத்தில் 30-09-12 ஞாயிறு அன்று படத்தை காண வந்த ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும்  சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், கேசரி மற்றும் சுண்டல் வழங்கப்பட்டன.

2வது வாரமும் கடந்த 07-10-12 ஞாயிறு அன்றும் இதே போன்று உணவு பண்டங்கள்  வழங்கப்பட்டன.

இந்த ஏற்பாடுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மன்ற  அமைப்பும் பொறுப்பேற்றுக் கொண்டன. 

சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்கள் விவரம் வருமாறு:

1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம்,  சென்னை - 2
2. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை, தமிழ் நாடு
3. ஒலிக்கிறது உரிமைக் குரல் மாத இதழ் மற்றும் அதனை  சார்ந்த அமைப்பாகிய அனைத்திந்திய  எம்.ஜி.ஆர். பொது நல இயக்கம்
4. எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள், சைதை, சென்னை - 15
5. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
5. பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு  , சென்னை - 12. 
6.  இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,  தமிழ் நாடு
     (அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
       பாரத ரத்னா டாக்டர்  எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
       நடிக மன்னன் எம்.ஜி.ஆர். கலைக்குழு)
 மற்றும் இதர பக்தர்கள்/அன்பர்கள் அமைப்பினர், சென்னை மாவட்டம் 

Thursday 2 August 2012

Reply to naveena adityan



Dear Editor Sir, (Naveena Adityan – fortnightly Magazine)

At the outset let me express my heartfelt thanks for having published my explanation in response to our write-up, made in the last issue.Also accept my appreciation for the translation of my elucidation into Tamil version, without any change in the meaning.While respecting the feelings of Mr. V.Srinivasan's (President of Sivaji Social Welfare Forum of South Chennai) write-up, I differ with the Statement of Mr. Nanjil Inba. I would like to put-forth my small illumination or clarification to the message given by Mr. Nanjil Inba : 

As per his Statement, when the survey taken by Kumudam Weekly Magazine, in 1990s, Late Respectable Sivaji Ganesan had many fans over other Artists. Our beloved God MGR was not at all in the scene during the survey by Kumudam magazine and they perceived him as Ex-CM and not viewed him as an Actor, at that time. Our beloved God MGR left the Tamil Cine Field in the year 1977 itself on his assuming the Charge as Chief Ministerr of Tamil Nadu, in response to the confidence reposed on him by the peopole of Tamil Nadu, with overwhelming majority. This confidence was gained by him only through his public interest and for his keen/active social activities. It is quite surprise to note that he was trusted by the people of Tamil Nadu fully and this fact was proved through his continuous success in the political career by increasing the Votes, year after year. I invite to your kind attention that at the time of leaving the Tamil Cine Field, our beloved MGR had nearly 17 films, as pending/incompleted or clogged with by mere performing Pooja. These films include the movies by the Stalwarts and so called Sivaji Ganesan's Group - Sridhar, A.P.Nagarajan, K.S.Gopalakrishnan & G.K. Dharmarajan (who made the Sivaji film "Ilaiya Thalimurai") etc. This itself is a great world achievement when an Actor, at his 60th Age, had 17 films, as Hero. 

The Survey may be true but at that time our beloved MGR was not in the Field. Moreover, he died in the year 1987 itself. Hence, let the Late respectable Sivaji Ganesan's Fans enjoy themselves, by comparing him with other Actors and Not with the LEGEND MGR.

So far as MGR was in the Cine Field, he was the Emperor. He still retains the title "Collection King" through his re-released films, on several occasions. Even now the Film Distributors for the whole State, located in the Meeran Sahib Street, Chintadripet, Chennai - 2 praising MGR who still lights in their life and thus he becomes visible for them as 'OLI VILAKKU'. In support of the statement, one distributor remarked astonishingly that the film 'ULAGAM SUTRUM VAALIBAN' made a record collection of 3 crores, silently, within 15 weeks of its re-release, without any advertisement, in a big manner, in the year 2008. This Advertisement is not even met out the 10% of the advertisement given for the film 'Karnan" recently. 

The 81 years of Tamil Cinema World knows that our beloved GOD M.G.R. Movies can only set Records and such Records cannot be broken by anybody else. It is to be noted that our beloved MGR had acted 115 Films as Hero. Out of this 115 movies, almost 90% of the films are re-released quite often, without any gap, throughout the State. The late respectable Sivaji Ganesan's Fans should understand this truth. Their affectionate actor had acted 288 films and out of this not even 20% of his films were re-released. It is enough to establish that our beloved MGR is unbeatable and unshaken. 

Under the circumstances, let the late respectable Sivaji Ganesan's Fan can make challenge with other Actors' Fans and NOT WITH US. 

M.G.R. - The only Actor who has Repeated Audience in the WORLD

The only first Actor turned out to be a Political Leader and ruled successive terms, until his
death, in the COUNTRY. 

The only Actor received "Bharath" Award and retains the Fans in mass, even after his death of 25 years, in the STATE. 

This apart his being a Recipient of "BHARATHA RATNA" Award for his valuable services in the Political Field. 

I conclude that - IRUNDALUM MARAINDALUM PER SOLLA VENDUM
IVAR POLA YAAR ENDRU OOR SOLLA VENDUM
VAZHNDAVAR KODI, MARAINDAVAR KODI
MAKKALIN MANADIL NIRPAVAR YAAR 

The answer to the above is OUR BELOVED GOD M.G.R.


With kind Regards,
Prof. S. Selvakumar,
IRAIVAN MGR BAKTHARGAL KUZHU

Saturday 23 June 2012

makkal thilagam rasigar c.s.kumar

C.S.Kumar one of makkal thilagam M.G.R. fan.


SCANNED FROM KALKI MAGAZINE.

vasool chakravarthi makkal thilagam

                                              கர்ணனின்  மறு வெளியீடு 100 நாள் ஒட்டிய    பரிதாபம் ;
1964  ஆண்டு பொங்கல் அன்று வெளி வந்த  மக்கள் திலகம்  நடித்த  தேவர் பிலிம்ஸ்  வேட்டைக்காரன் மற்றும்   நடிகர் திலகம் நடித்த  பந்துலுவின் பிரமாண்ட படமான  கர்ணனும் களம் இறங்கியதில்  வேட்டைக்காரன்  மகத்தான வெற்றி பெற்றது. கர்ணன்  வசூலில் வெற்றி பெறவில்லை.நூறு  நாட்கள்  சென்னை - சாந்தியிலும்  மதுரை  - தங்கத்திலும்  ஓடியது.
வேட்டைக்காரன்  சென்னை , சித்ரா - பிராட்வே - மேகலா , மதுரை .திருச்சி . சேலம்   நகரங்களில் நூறு  நாட்களும் சேலம் நகரில்  இருபது  வரங்களும்  ஓடி வசூலில்  சாதனை  படைத்தது . இது  வரலாற்று உண்மையாகும் .
1964  பின்னர்  மறு வெளியீட்டில் பல வருடங்கள் தொடர்ந்து  வேட்டைக்காரன்  மட்டும்  தமிழகம்  எங்கும் வெளியாகி  வசூல்  சாதனை  படைத்தது . கர்ணன்   அந்த  அளவிற்கு  வெளியாகவில்லை .
பந்துலு  தயாரிப்பில்   தொடர்ந்து நான்கு சிவாஜியின் படங்கள்  படு தோல்வி  [க.தமிழன் ,பலே பாண்டியா, கர்ணன் , முரடன் முத்து] கண்ட பின்  மக்கள் திலகம் mgr  அவர்களை  வைத்து  ஆயிரத்தில் ஒருவன்  படம் எடுத்து  மாபெரும்  வெற்றி  பெற்றது  வரலாற்று  உண்மையாகும்.

காலம் கடந்து  இன்றும் ஆயிரத்தில் ஒருவன்   ராயல்டி  படமாக திகழ்கிறது .

நீண்ட இடை வெளிக்கு  பின்னர் கர்ணன் படம்  திவ்யா பிலிம்ஸ்  மூலமாக  நாற்பது லட்சங்கள்  செலவு செய்து  டிஜிடலில்  ,மார்ச்  மாதம் 70  திரை அரங்குகளில்  ஒன்று. இரண்டு.மூன்று, நான்கு  காட்சிகளாக திரையிட்டு  பல  லட்சங்கள்  தினசரி செலவு செய்து  அணைத்து ஊடகங்கள்  மற்றும் தனியார்  நிறுவனங்கள் , மூலம் மாபெரும்  வெற்றி என்ற  மாய தோற்றத்தை  உருவாக்கினார்கள்.
வசூல்  ரீதியாக  சென்னை  - ஏவிஎம் - ராஜேஸ்வரி .நாகர்கோயில் ,திருச்சி , சேலம் ,கோவை  மற்றும் திருப்பூர்  நகரங்களில்   சாதனை உண்டானது .
25  நாட்களுக்கு பின்னர்  எந்த  ஒரு நகரிலும் தினசரி  மூன்று  கட்சிகள் ஓடாத நிலையில் பொய்யான விளம்பரங்கள்  தொடர்ந்து வெளியிட்டு வந்த திவ்யா பிலிம்ஸ்  மற்றும் இனைய தள சிவாஜி  நண்பர்களும்  ஏதோ  கர்ணன்  மகத்தான வசூல் சாதனை  என்றும் கர்ணன் முதல்  வெளியீட்டிலும்  வெற்றி என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை அரங்கேற்றி  வருகின்றனர் .சென்னையில்  தினசரி ஒரு காட்சியாக   இரண்டு  அரங்கில்  ஒட்டப்பட்டது ஒன்றும்  சாதனை அல்ல .

பல  கோடி  செலவு  செய்து  5  கோடி  வசூல் என்று  விளம்பரம் செய்யும்  இவர்களை பற்றி  உண்மை நிலவரம்  அறிந்தவர்கள்  புரிந்து கொள்வார்கள்.
மேலும் கர்ணன் 11  ஆண்டுகள் இடை வெளிக்கு பின்னர்  வந்த படம் , டிஜிடல் ,இந்து மத புராண கதை  மற்றும்  நட்சத்திர  பட்டாளம்  என பல அம்சம்  உள்ளதால் கோடிகள்செலவு  மற்றும்  ஊடக விளம்பரம் மூலம்  நிர்பந்திக்க பட்ட படம்.

இன்று 100 வது நாள்  ஓட்ட பட்ட கர்ணன்  எந்த காலத்திலும் வசூலில்  இடமில்லை .

எந்த வித செலவு இல்லாமல்   சென்னை நகரில் மட்டும் கடந்த ஆண்டில்  மக்கள் திலகத்தின் 40 படங்கள்  சுமார்  81 அரங்கில்  தினசரி  மற்றும்  காலை காட்சிகளாக  வெளியாகி  வசூலில்  சாதனை  படைத்தது  உண்மையான வெற்றியாகும் .

மக்கள் திலகம் ஒருவரே  என்றென்றும்  வசூல் சக்கரவர்த்தி .

Monday 18 June 2012

sivaji fan comment and our reply

Professor Selvakumar on reply to sathyasai sivaji fan


Our reply to the above comment


Sunday 6 May 2012

comment retaliation

Professor Selvakumar and Hayath.





false propoganda 50 days

இன்றைய தினத்தந்தியில் வெளியான விளம்பரம்.


உண்மை நிலவரம்

பி.வி.ஆர் மற்றும் மாயாஜால் திரைகளில் கர்ணன் படம் இல்லை மேற்சொன்ன P.v.r. cinema vil odum padangal


safe, vazhakku enn 18/9, annabond(kannada), hugo 3d, grandmasters (mal), gantham, jannat2, tezz(h), 22 female kottayam (mal) the avengers, stars 3d, leelai, vicky donor, oru kal oru kannadi, housefull2(h), 3, muppozhudhum un karpanai, the woman in black 

இது உண்மையா என்று தெரிய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.

மேலும் மாயாஜால் திரைகளில் ஓடும் படங்கள்

tamil movies vazhuku enn 18/9, leelai, orukal oru kannadi, 3
english safe, hugo the avengers, the avenger 3d, battleship
hindi movies
jannat, tezz.

telugu dammu.

mal
grand master, 22 female kottayam, ordinary
kannada annabond.


மேலே உள்ள சுட்டியை நீங்களே அழுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
 உண்மையில் சாய் சாந்தி மற்றும் சத்யம் 1 காட்சியாக படம் ஒடுகிறது. இதுவே அவர்களுக்கு சாதனை தான் எதற்கு இந்த பொய் விளம்பரம். இதான் பெயர் தான் மாயை பொய் பிம்பம்.

Thursday 3 May 2012

கலைமணி பதில்

கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சென்னை
ஸ்ரீ எம்.ஜி.ஆர். பக்தர்கள், சென்னை.

கோபால் மற்றும் தென்காசி கணேசன் கவிதைகளுக்கு கண்டனம்.








Sunday 29 April 2012

Reply for Mayyam writer ANM

anm எழுதியதற்கு எம்.ஜி.ஆர் பக்தர்கள் தரும் பதில்.












இறுதியாக ஒன்றை கூற விரும்புகிறோம். உங்கள் சிவாஜி கணேசன் அவர்கள், எங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இப்பூவுலகினை விட்டு தெய்வமானபோது ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களை போல் வாழ வேண்டும் என்று கூறி அஞ்சலி செலுத்தினார்.

எதிரிகளை அடிக்கும் சூழ்ச்சிக்காரர் மற்றும் முதுகில் குத்துபவர் என்பது உண்மையாருப்பின் சிவாஜி கணேசன் அவர்கள் எங்கள் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் போது ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களை போல் வாழ வேண்டும் என்று கூறி அஞ்சலி செலுத்தி இருக்க மாட்டார் என்பதை நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும். அப்படி அவர் பொய்யாக சொல்ல வேண்டிய அவசியம் உங்கள் சிவாஜி கணேசனுக்கு இல்லை அந்த வார்த்தைகள் உண்மையாய் அவர் நெஞ்சில் இருந்த வந்தவை.

நீங்கள் சிவாஜி கணேசன் அவர்களை புகழ்ந்து கொள்ளுங்கள் ஆனால் எங்கள் புனிதத்தலைவரை விமர்சித்தால் விளக்க கணைகள் தொடரும். சிவாஜி கணேசன் அவர்களின் இளைய மகன் திரு.பிரபு அவர்கள் மீது கொண்ட மிகுந்த மரியாதை காரணமாக இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

Sunday 15 April 2012

MGR In Kumudham

குமுதம் பத்திரிக்கையில் ஸ்டாலின் அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி தனக்கு ஏற்பட்ட சிலவற்றை விவரித்திருக்கிறார்.

கீழே உள்ள படங்களை சொடுக்கவும்.




Posted by Tirupur Ravichandran.

Friday 6 April 2012

MGR And V.N.Chidambaram


திரு வி என் சிதம்பரம் அவர்கள் (முன்னாள் தக்கார் மீனாட்சியம்மன் திருக்கோவில் மதுரை) மக்கள் திலகத்தின் பேரன்பை பெற்றவர். பொன்மனச்செம்மல் அவர்கள்  திரு வி என் சிதம்பரம் அவர்களை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலின் தக்காராக நியமனம் செயதார். அப்பொறுப்பை ஒன்பது ஆண்டுகள் திறம்பட செய்து அனைவரின் பாராட்டை பெற்றார்.  அப்பெருமகனின் மனிதநேயம் மற்றும் குண நலன்களை பற்றி பல நூல்களில் நிறைய எழுதி உள்ளார்.


திரைப்படதுறையினர், அரசியல் பிரமுகர்கள், ஆன்மீக பெரியோர்கள் மற்றும்  அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறார். 

தமது தாத்தா வள்ளியப்ப செட்டியார் பட்ட கஷ்டங்களை மனதில் கொண்டு பிறர் துன்பம் நீங்க எராளமான உதவிகளை செய்து வருகிறார். ஏப்ரல் ஒன்றாம் தேதி தமது பிறந்த ஊரான ராங்கியத்தில் தமது தாத்தாவின் சிலையை திறந்து பல நல திட்ட உதவிகளை செயதார். முதல் தவணையாக ஐம்பது லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பு தொகையாக போட்டுள்ளார்.  இரண்டாம் தவணையாக இன்னும் ஐம்பது லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பு தொகையாக போட உள்ளார். வைப்பு தொகையில் வரும் வட்டியில் பல நல திட்ட உதவிகள் தொடர்ந்து செய்ய உள்ளார். மக்கள் திலகத்தின் வழியில் செட்டிநாட்டு வள்ளல்திரு வி என் சிதம்பரம் அவர்கள் ஏழை எளியவர் வாழ்வு வளம் பெற செய்து வரும் மனிதநேய உதவிகளை மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பாக  வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Tuesday 3 April 2012

Flase Propoganda

கர்ணனின்  பொய்யான  விளம்பரமும்  தவறான தகவல்களும்

சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படம் 1964  பொங்கல்  அன்று மிகவும் எதிர்பார்ப்புடன் வெளி வந்து  சாதாரண  வசூல் பெற்று தயாரிப்பாளரையும்  விநியோகஸ்தர்களையும் ஏமாற்றிய  படம்  கர்ணன் . சென்னை - சாந்தி  மற்றும்  தங்கம் - மதுரை  2  திரை யில் 100  நாள்  ஒட்டிய  பரிதாபம் எல்லோரும்  அறிந்ததே . நீண்ட இடை வெளிக்கு பின்னர் ஒரு கோடி  செலவு செய்து ஊடகங்கள் ,தினசரி  விளம்பரங்கள் ,வானொலி  மற்றும் எல்லா விதமான செலவுகள்  செய்து 3  வாரத்தில்  ஒரு கோடி  வசூல் செய்து சாதனை  என்று  விளம்பரம்  செய்து  வருவது  மிகவும் கேலி கூத்தாக  உள்ளது.
அன்றும் இன்றும் என்றும்  உண்மையான  வசூல் சக்ரவர்த்தி  மக்கள்திலகம்  ஒருவரே.

கடந்த கால உண்மை நிலவரங்கள்
மக்கள் திலகம் மறைந்து  25  ஆண்டுகள்  பின்னரும் தொடர்ந்து அவரது  எண்பது படங்கள் தென்னாடெங்கும்  திரையிடப்பட்டு  அமோக  வசூல் பெற்று
 முதலிடத்தில் உள்ளார்.

2011 ஜூன்  மாதம்  பெங்களூரில்  அடிமைபெண் 18   அரங்குகளில்  வெளியாகி  சுமார் இருபது லக்ஷம்  வசூல் செய்து  மாபெரும்  வரலாறு  படைத்தது . அதற்கு  போட்டியாக  இந்த ஆண்டு  கணேசனின்  வசந்தமாளிகை  ஒரே திரையில் வெளியாகி அவமான தோல்வி பெற்றது . வசந்த மாளிகை நொந்த  மாளிகை ஆனது. சிவாஜி  வாழ்ந்த  காலத்திலும் , நடிப்பை விட்டு  வாழ்ந்த காலத்திலும் .மறைந்து 11 ஆண்டு இந்த காலத்திலும் மக்கள் திலகம் செய்த சாதனைகளை  நெருங்க முடியவில்லை .

எந்த காலத்திலும் மக்கள்திலகம்  படைத்த  சாதனைகளை  சிவாஜி  ரசிகர்களால் கனவிலும் நெருங்க முடியாது  என்பதே  உண்மை .